செய்திகள் மலேசியா
கொரோனா UPDATE: 101 வயது மூதாட்டி உட்பட 76 பேர் மரணம்
கோலாலம்பூர்:
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக 76 மரணச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அவர்களில் 101 வயது மூதாட்டியும் அடங்குவார்.
கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முழு முடக்க நிலை உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 914ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 459 பேருக்கு சுவாச உதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதே வேளையில் 76 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 101 வயதான, சிலாங்கூரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து கிருமித்தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,844ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளில் இருந்து 8,334 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 572,113ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
இதே போல் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 652,204ஆக கூடியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
