
செய்திகள் மலேசியா
மலேசியாவில் இன்று புதிதாக 5,304 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கோலாலம்பூர்:
மலேசியாவில் இன்று புதிதாக 5,304 பேருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இன்றும் அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,973 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய எண்ணிக்கையைக் காட்டிலும் (391) சற்று அதிகம்.
இரண்டாம் இடத்தில் சரவாக் உள்ளது. அங்கு மட்டும் 544 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
கோலாலம்பூர் 462 பேரும் ஜொகூரில் 363 பேரும், சபாவில் 335 பேரும் கிளந்தானில் 179 பேரும் லாபுவானில் 158 பேரும் பினாங்கில் 256 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.