செய்திகள் மலேசியா
1.3 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் முழுமையாக போடப்பட்டுள்ளது: சுகாதார அமைச்சு
புத்ராஜெயா:
மலேசியாவில் 1.3 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் முழுமையாக போடப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
3,030,096 தனி நபர்களுக்கு ஒரு தவணை தடுப்பூசி போடப்படுள்ளதாகவும் 1,331,262 பேருக்கு இருதவணைகள் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.
ஆக மொத்தத்தில் நாடு முழுவதும் இதுவரை 4,361,358 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக இன்று டுவிட்டர் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலாங்கூரில் 1,74,302 பேருக்கும், சரவாக்கில் 141,972, பேராக்கில் 126,876, ஜொகூரில் 126,673, கோலாலம்பூரில் 122,797 பேருக்கும் இருதவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
நேற்று ஒரேநாளில் 133,804 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா மேலும் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் குடிமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை நாடு எட்டிப்பிடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 3:07 pm
LRT இரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: 43 வயது வெளிநாட்டவர் கைது
August 24, 2026, 3:06 pm
பண்டமாரானில் உள்ள உணவகத்தில் ஆயுதங்களுடன் ரகளை: 5 பேர் கைது
August 24, 2026, 12:55 pm
சுபாங் ஜெயா கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்து: 10 பேர் காயம்
August 24, 2026, 11:45 am
இரும்பு கம்பியால் அண்டை வீட்டுக்காரரைத் தாக்கிய நபர்: 7 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு
August 24, 2026, 11:26 am
ஜொகூர் லிங்கெடுவா நெடுஞ்சாலையில் சட்டவிரோத மோட்டார் பந்தய விவகாரம்: 8 பேர் கைது
August 24, 2026, 10:55 am
செந்தூல் கம்போங் காசிப்பிள்ளையில் அதிகாலையில் தீ விபத்து: ஓர் ஆடவர் பாதிக்கப்பட்டார்
August 24, 2026, 10:27 am
நாட்டிலுள்ள நான்கு மாநிலங்களில் காற்றின் தர குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
August 23, 2026, 9:23 pm
