செய்திகள் மலேசியா
அடுத்த இரு வாரங்கள் முக்கியமானவை: டாக்டர் நூர் ஹிஷாம்
கோலாலம்பூர்:
கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அடுத்த இரு வாரங்கள் முக்கியமானவை என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
அன்றாடம் பதிவாகும் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இன்னும் ஏறுமுகமாகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த இரு வாரங்களுக்குள் அன்றாட தொற்று எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் குறைவாக கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"இப்போதும்கூட சிலர் பயணங்களை மேற்கொள்கிறார்கள். மேலும் சிலர் ஒன்று கூடி சிலவற்றைக் கொண்டாடுகிறார்கள். இது வருத்தமளிக்கிறது. இது பொறுப்பற்ற செயல்.
"கிருமித்தொற்று சங்கிலியை உடைக்கும் நடவடிக்கையில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் அப்பொழுதுதான் இது சாத்தியமாகும்," என்று தமது பதிவில் நூர் ஹிஷாம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் நாட்டில் 6,849 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவான நிலையில், நேற்று அந்த எண்ணிக்கை 5,793 ஆக குறைந்தது. இந்நிலையில் நூர் ஹிஷாம் அனைவரது ஒத்துழைப்பையும் கோரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 3:07 pm
LRT இரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: 43 வயது வெளிநாட்டவர் கைது
August 24, 2026, 3:06 pm
பண்டமாரானில் உள்ள உணவகத்தில் ஆயுதங்களுடன் ரகளை: 5 பேர் கைது
August 24, 2026, 12:55 pm
சுபாங் ஜெயா கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்து: 10 பேர் காயம்
August 24, 2026, 11:45 am
இரும்பு கம்பியால் அண்டை வீட்டுக்காரரைத் தாக்கிய நபர்: 7 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு
August 24, 2026, 11:26 am
ஜொகூர் லிங்கெடுவா நெடுஞ்சாலையில் சட்டவிரோத மோட்டார் பந்தய விவகாரம்: 8 பேர் கைது
August 24, 2026, 10:55 am
செந்தூல் கம்போங் காசிப்பிள்ளையில் அதிகாலையில் தீ விபத்து: ஓர் ஆடவர் பாதிக்கப்பட்டார்
August 24, 2026, 10:27 am
நாட்டிலுள்ள நான்கு மாநிலங்களில் காற்றின் தர குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
August 23, 2026, 9:23 pm
