செய்திகள் மலேசியா
காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டதாக தகவல் இல்லை: அமைச்சர் ரசோல் வாஹித்
கோலாலம்பூர்:
நாட்டில் காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டதாக எந்த ஒரு தகவலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் டத்தோ ரசூல் வாஹித் Dato Rosol Wahid தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் நிலவும் விலையானது அனைவரது வாங்கும் சக்திக்கு உட்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
பண்டிகைக் காலத்துடன் ஒப்பிடுகையில் பல இடங்களில் காய்கறி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
"உதாரணமாக பண்டிகைக் காலத்தின்போது ஒரு கிலோ மிளகாயின் விலை 15 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் விலை இப்போது 6 ரிங்கிட்டாக குறைந்துள்ளது.
சந்தைக்குப் புதிதாக வரும் காய்கறிகளின் விலை சற்று அதிகமாக இருக்கக்கூடும். பழைய காய்கறிகளின் விலை குறைவாக இருக்கலாம்.
"எனினும் விலை அதிகமாக இருப்பதாக கருதும் பட்சத்தில் பொதுமக்கள் எங்களுக்குத் தகவல் தெரிவிக்கலாம்," என்று துணை அமைச்சர் Rosol Wahid தெரிவித்துள்ளார்.
தக்காளி, வெள்ளரிக்காய், இஞ்சி உள்ளிட்டவற்றின் விலைகள் கடந்த இரு வாரங்களில் வெகுவாக அதிகரித்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்தபோதே அவர் மேற்கண்ட விவரங்களைத் தெரிவித்தார்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
