
செய்திகள் மலேசியா
காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டதாக தகவல் இல்லை: அமைச்சர் ரசோல் வாஹித்
கோலாலம்பூர்:
நாட்டில் காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டதாக எந்த ஒரு தகவலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் டத்தோ ரசூல் வாஹித் Dato Rosol Wahid தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் நிலவும் விலையானது அனைவரது வாங்கும் சக்திக்கு உட்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
பண்டிகைக் காலத்துடன் ஒப்பிடுகையில் பல இடங்களில் காய்கறி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
"உதாரணமாக பண்டிகைக் காலத்தின்போது ஒரு கிலோ மிளகாயின் விலை 15 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் விலை இப்போது 6 ரிங்கிட்டாக குறைந்துள்ளது.
சந்தைக்குப் புதிதாக வரும் காய்கறிகளின் விலை சற்று அதிகமாக இருக்கக்கூடும். பழைய காய்கறிகளின் விலை குறைவாக இருக்கலாம்.
"எனினும் விலை அதிகமாக இருப்பதாக கருதும் பட்சத்தில் பொதுமக்கள் எங்களுக்குத் தகவல் தெரிவிக்கலாம்," என்று துணை அமைச்சர் Rosol Wahid தெரிவித்துள்ளார்.
தக்காளி, வெள்ளரிக்காய், இஞ்சி உள்ளிட்டவற்றின் விலைகள் கடந்த இரு வாரங்களில் வெகுவாக அதிகரித்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்தபோதே அவர் மேற்கண்ட விவரங்களைத் தெரிவித்தார்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am
அனைத்து தந்தையர்களுக்கும் பேரரசர் தம்பதியர் தந்தையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர்
June 15, 2025, 10:35 am
உணவகங்களில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கான அனுமதி விரைந்து வழங்கப்பட வேண்டும்: பிரிமாஸ்
June 15, 2025, 10:31 am