
செய்திகள் மலேசியா
தனியார் பங்களிப்புடன் தினமும் 145,000 தடுப்பூசிகள் போடப்படும்: கைரி ஜமாலுதீன்
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் தனியார் மருத்துவர்கள் (மருத்துவ பயிற்சியாளர்கள்-Private medical practitioners ) மூலம் தினந்தோறும் 145,000 தடுப்பூசிகள் போடப்பட இருப்பதாக அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
ஜூலை முதல் இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வரும் என்றும் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இவ் வாரம் தனியார் பங்களிப்பின் மூலம் நாள்தோறும் 60 ஆயிரம் ஊசிகள் செலுத்தப்படும். ஜூன் 23ஆம் தேதி இந்த எண்ணிக்கை 78 ஆயிரமாக அதிகரிக்கும்.
எதிர்வரும் ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கையானது நாள்தோறும் 145,000 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்," என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள Protect Health நிறுவனத்திடம் தடுப்பூசி போடும் நடவடிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். அந்த நிறுவனத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்களே தடுப்பூசிகளைச் செலுத்தமுடியும். ஒவ்வொரு தடுப்பூசிக்கும் தனியார் மருத்துவர்களுக்கு 14 ரிங்கிட்டும் protect health நிறுவனத்துக்கு 1 ரிங்கிட்டும் அளிக்கப்படும்.
பயிற்சி அளித்தல், தடுப்பூசி நடவடிக்கையை மேற்பார்வையிடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதால் இந்த ஒரு ரிங்கிட் கட்டணம் அளிக்கப்படுவதாக கைரி ஜமாலுதீன் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm