செய்திகள் மலேசியா
மலேசியாவில் இன்று கொரொனா தொற்று நோயாளிகள் 5419; சிலாங்கூர் 1996
கோலாலம்பூர்:
மலேசியாவில் இன்று புதிதாக 5,419 பேருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. நேற்றைய எண்ணிக்கையைவிட 470 பேர் அதிகம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இன்றும் அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,996 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய எண்ணிக்கையைவிட இது 473 கூடுதல் இது.
இரண்டாம் இடத்தில் இன்றும் சரவாக் உள்ளது. அங்கு மட்டும் 718 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
கோலாலம்பூர் 650 பேரும் ஜொகூரில் 366 பேரும், நெகிரி செம்பிலானில் 396 பேரும் சபாவில் 230 பேரும் கிளந்தானில் 245 பேரும் லாபுவானில் 138 பேரும் பினாங்கில் 124 பேரும் கெடாவில் 252 பேரும் பேராக்கில் 68 பேரும் மலாக்காவில் 155 பேரும் பஹாங்கில் 32 பேரும் புத்ராஜெயாவில் 5 பேரும் பெர்லிசில் ஒருவரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
