செய்திகள் மலேசியா
ஒரு பேரழிவைத் தவிர்த்துள்ளோம் என்கிறார் பிரதமர்
புத்ராஜெயா:
முழு முடக்க நிலையுடன் கூடிய MCO 3.0 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளதால் நாடு எதிர்கொண்ட ஒரு பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், MCO 3.0ன் முதலாவது கட்டத்தின் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொற்றுப் பரவல் விகிதம் தற்போது குறையத் தொடங்கி உள்ளதாக தெரிவித்த அவர், தொற்று வரைபடத்தில் மேல்நோக்கிச் சென்ற அம்புக்குறியீடு தற்போது கீழ்நோக்கி திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த மே 29ஆம் தேதி 9,020ஆகப் பதிவான அன்றாட புதுத்தொற்றுகளின் எண்ணிக்கை, திங்கட்கிழமை 4,949ஆக குறைந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
"நாட்டின் சுகாதார அமைப்பால் புதிய நோயாளிகளையும் ஏற்றுக்கொண்டு சிகிச்சை அளிக்க முடிகிறது. குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது.
"இதன்மூலம் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது தெரிகிறது. நாம் ஒரு பேரழிவைத் தவிர்த்துள்ளோம்," என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
