செய்திகள் மலேசியா
500,000 தடுப்பூசிகள் வழங்கும் சீனா: நன்றி தெரிவித்த மலேசியா
கோலாலம்பூர்:
மலேசியாவுக்கு மிக விரைவில் சீனாவில் இருந்து நன்கொடையாக 500,000 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சர் Wang Yi -யிடம் இருந்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் துன் ஹுசைன் தெரிவித்தார்.
இதற்காக சீன அரசுக்கும் அந்நாட்டுக் குடிமக்களுக்கும் மலேசிய அரசாங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஹிஷாமுதீன் கூறியுள்ளார்.
"இந்த விலை மதிப்பில்லாத உதவிக்காக சீனாவை வெகுவாகப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். சரியான நேரத்தில் சீனா செய்துள்ள இந்த உதவியின் மூலம் மலேசியாவில் செயல்படுத்தப்படும் தேசிய தடுப்பூசித் திட்டம் மேலும் வலுப்பெறும்.
"இந்த முன்னெடுப்பின் மூலம் மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நெருக்கமான நட்பானது மேலும் உறுதியடையும். இதன் பலனாக இரு தரப்புக்கும் நன்மை விளையும்," என ஹிஷாமுதீன் துன் ஹுசைன் மேலும் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 2:52 pm
ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
ஜொகூர் பிரச்சாரத்தில் மசீசவுக்கு எதிராக டத்தோஸ்ரீ அன்வர் கிண்டலான கருத்துக்களைத் தெரிவித்தார்
July 9, 2026, 11:01 pm
