செய்திகள் மலேசியா
500,000 தடுப்பூசிகள் வழங்கும் சீனா: நன்றி தெரிவித்த மலேசியா
கோலாலம்பூர்:
மலேசியாவுக்கு மிக விரைவில் சீனாவில் இருந்து நன்கொடையாக 500,000 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சர் Wang Yi -யிடம் இருந்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் துன் ஹுசைன் தெரிவித்தார்.
இதற்காக சீன அரசுக்கும் அந்நாட்டுக் குடிமக்களுக்கும் மலேசிய அரசாங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஹிஷாமுதீன் கூறியுள்ளார்.
"இந்த விலை மதிப்பில்லாத உதவிக்காக சீனாவை வெகுவாகப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். சரியான நேரத்தில் சீனா செய்துள்ள இந்த உதவியின் மூலம் மலேசியாவில் செயல்படுத்தப்படும் தேசிய தடுப்பூசித் திட்டம் மேலும் வலுப்பெறும்.
"இந்த முன்னெடுப்பின் மூலம் மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நெருக்கமான நட்பானது மேலும் உறுதியடையும். இதன் பலனாக இரு தரப்புக்கும் நன்மை விளையும்," என ஹிஷாமுதீன் துன் ஹுசைன் மேலும் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
