செய்திகள் மலேசியா
மலேசியாவில் இன்று புதிதாக 5,738 பேருக்கு கோவிட் 19 தொற்று; சிலாங்கூர் 1858, நெகிரி 1086
கோலாலம்பூர்:
மலேசியாவில் இன்று புதிதாக 5,738 பேருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இன்றும் அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,858 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் இடத்தில் நெகிரி செம்பிலான் 1086 பேருடன் பதிவு செய்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு நெகிரி செம்பிலானில் ஆயிரத்தைத் தாண்டி இன்று பதிவாகி இருக்கிறது.
மூன்றாவது இடத்தில் இன்று கோலாலம்பூர் இருக்கிறது. கூட்டரசுப் பிரதேசத்தில் 641 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
சரவாக்கில் 559 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
ஜொகூரில் 449 பேரும் மலாக்காவில் 184 பேரும் கிளந்தானில் 154 பேரும் கெடாவில் 197 பேரும் லாபுவானில் 97 பேரும் பினாங்கில் 97 பேரும் பேரும் பேராக்கில் 30 பேரும் பஹாங்கில் 54 பேரும் புத்ராஜெயாவில் 7 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
