செய்திகள் மலேசியா
நாடாளுமன்ற கூட்டம் எப்போது?: பிரதமர் அலுவலகம் விளக்கம்
புத்ராஜெயா:
நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பாக மாமன்னர் அறிவுறுத்தி இருப்பதை பிரதமர் தமது கவனத்தில் கொண்டிருப்பதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாமன்னரின் அண்மைய அறிக்கை தொடர்பில் கூட்டரசு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அனைத்துவித நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் கூறி உள்ளது.
"இதற்கு முன்பு மாமன்னருடனான சந்திப்புகளின்போது பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், அவசரகால சட்டங்களை அமல்படுத்துதல், தேசிய தடுப்பூசித் திட்டம், பொருளாதார ஊக்க தொகுப்புகள் மற்றும் நிதியுதவி நாடாளுமன்ற அமர்வுகள்,தேசிய மீட்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாமன்னரிடம் பிரதமர் தெரிவித்துள்ளார்.
"இந்நிலையில் மாமன்னரின் அண்மைய கருத்துக்கேற்ப கூட்டரசு அரசியலமைப்பு மற்றும் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது.
முன்னதாக எதிர்வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட வாய்ப்புள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன
April 10, 2026, 3:32 pm
பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு: 60 வயது முதியவர் உடல் கருகிய நிலையில் மீட்பு
April 10, 2026, 3:23 pm
பெலூரானில் 157 மாணவர்கள் தவிப்பு: வெயிலிலும் மழையிலும் கூடாரத்தின் கீழ் கல்வி பயிலும் அவலம்
April 10, 2026, 12:55 pm
