செய்திகள் மலேசியா
நூறு கிலோ போதைப் பொருள் கடத்தல்: அண்மையில் குழந்தை பெற்ற இளம் தாய், கணவர் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர்:
அண்மையில் குழந்தை பெற்றெடுத்த பெண், அவரது கணவர் மற்றும் 21 வயது இளைஞர் ஆகிய மூன்று பேர் மீதும் நூறு கிலோ போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு செராஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
21 வயதான Gan Pei Hong, 31 வயதான அவரது கணவர் Cha Wee Sang, Yap Yau Yang ஆகிய மூவரும் கடந்த 5ஆம் தேதி தாமான் சேகரில் இந்த குற்றத்தைப் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
அன்றைய தினமே தாமான் புக்கிட் ஹிஜாவ் பகுதியில் 98.4 கிலோ ஹராயின் சார்ந்த போதைப் பொருட்களைக் கடத்தியதாக மற்றொரு குற்றச்சாட்டையும் Yap Yau Yang எதிர்கொண்டுள்ளார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முறையீடு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. போதைப்பொருள் கடத்தலுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை அல்லது 30 ஆண்டு கால ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
அண்மையில்தான் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் என்பதை கருத்தில் கொண்டு Gan Pei Hongக்கு பிணை வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் வாய்மொழியாக விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்தார் மாஜிஸ்திரேட். எனினும் Gan Pei Hongஐ மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
