
செய்திகள் மலேசியா
நூறு கிலோ போதைப் பொருள் கடத்தல்: அண்மையில் குழந்தை பெற்ற இளம் தாய், கணவர் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர்:
அண்மையில் குழந்தை பெற்றெடுத்த பெண், அவரது கணவர் மற்றும் 21 வயது இளைஞர் ஆகிய மூன்று பேர் மீதும் நூறு கிலோ போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு செராஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
21 வயதான Gan Pei Hong, 31 வயதான அவரது கணவர் Cha Wee Sang, Yap Yau Yang ஆகிய மூவரும் கடந்த 5ஆம் தேதி தாமான் சேகரில் இந்த குற்றத்தைப் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
அன்றைய தினமே தாமான் புக்கிட் ஹிஜாவ் பகுதியில் 98.4 கிலோ ஹராயின் சார்ந்த போதைப் பொருட்களைக் கடத்தியதாக மற்றொரு குற்றச்சாட்டையும் Yap Yau Yang எதிர்கொண்டுள்ளார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முறையீடு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. போதைப்பொருள் கடத்தலுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை அல்லது 30 ஆண்டு கால ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
அண்மையில்தான் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் என்பதை கருத்தில் கொண்டு Gan Pei Hongக்கு பிணை வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் வாய்மொழியாக விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்தார் மாஜிஸ்திரேட். எனினும் Gan Pei Hongஐ மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm