செய்திகள் மலேசியா
நூறு கிலோ போதைப் பொருள் கடத்தல்: அண்மையில் குழந்தை பெற்ற இளம் தாய், கணவர் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர்:
அண்மையில் குழந்தை பெற்றெடுத்த பெண், அவரது கணவர் மற்றும் 21 வயது இளைஞர் ஆகிய மூன்று பேர் மீதும் நூறு கிலோ போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு செராஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
21 வயதான Gan Pei Hong, 31 வயதான அவரது கணவர் Cha Wee Sang, Yap Yau Yang ஆகிய மூவரும் கடந்த 5ஆம் தேதி தாமான் சேகரில் இந்த குற்றத்தைப் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
அன்றைய தினமே தாமான் புக்கிட் ஹிஜாவ் பகுதியில் 98.4 கிலோ ஹராயின் சார்ந்த போதைப் பொருட்களைக் கடத்தியதாக மற்றொரு குற்றச்சாட்டையும் Yap Yau Yang எதிர்கொண்டுள்ளார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முறையீடு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. போதைப்பொருள் கடத்தலுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை அல்லது 30 ஆண்டு கால ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
அண்மையில்தான் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் என்பதை கருத்தில் கொண்டு Gan Pei Hongக்கு பிணை வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் வாய்மொழியாக விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்தார் மாஜிஸ்திரேட். எனினும் Gan Pei Hongஐ மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
