நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சர் தக்கியுதீன் ஹாசனுக்கு எதிராகப் புகார்: விசாரணை நடப்பதாக IGP தகவல்

கோலாலம்பூர்:

பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தக்கியுதீன் ஹாசனுக்கு (Takiyuddin Hassan)

எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை தலைவர் டத்தோஸ்ரீ அக்ரைல் சானி அப்துல்லாஹ் சானி Acryl Sani Abdullah Sani இன்று இத் தகவலை உறுதிப்படுத்தினார். மேலும் தேவை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டரசு காவல்துறை தலைமையகமான புக்கிட் அமான் விசாரணை நடத்திவரும் அதேவேளையில் எந்த சட்ட விதியின்கீழ் விசாரணை நடைபெறுகிறது என்பதை காவல்துறை தலைவர் தெரிவிக்கவில்லை.

மாமன்னரது உத்தரவை மீறியதாக கூறப்படும் புகாரை எதிர்கொண்டுள்ளார் தக்கியுதீன்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரை இயன்ற விரைவில் நடத்தவேண்டும் என மாமன்னர்  அண்மையில் தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்தைப் புறக்கணிக்கும் வகையில் தக்கியுதீன் தன்மூப்பான கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்துள்ளது.

நாட்டில் அமலில் உள்ள அவசரநிலையின் காலம் குறித்து அமைச்சரவை மாமன்னரிடம் முன்வைக்கும் பரிந்துரையின் பேரில் முடிவு எடுக்கப்படும் என்று தக்கியுதீன் கூறியதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

மேலும் ஆகஸ்ட் 1ஆம் தேதியோடு அவசரநிலையை நீட்டிப்பது அல்லது முடிவுக்கு கொண்டு வருவது குறித்து மாமன்னர் தமது அதிகாரத்தை முடிவெடுக்க வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து சர்ச்சை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset