
செய்திகள் மலேசியா
மலேசியாவில் இன்று கொரொனா தொற்று நோயாளிகள் 5,911; சிலாங்கூர் 2,111
கோலாலம்பூர்:
மலேசியாவில் இன்று புதிதாக 5,911 பேருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இன்றும் அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,111 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் இடத்தில் இன்றும் நெகிரி செம்பிலான் 770 பேருடன் பதிவு செய்துள்ளது.
மூன்றாவது இடத்தில் சரவாக் இருக்கிறது. அங்கு 569 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
கூட்டரசுப் பிரதேசம் - கோலாலம்பூர் 483 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜொகூரில் 498 பேரும் பேராக்கில் 245 பேரும் மலாக்காவில் 134 பேரும் கிளந்தானில் 223 பேரும் சபாவில் 199 பேரும் கெடாவில் 204 பேரும் லாபுவானில் 185 பேரும் பினாங்கில் 122 பேரும் பஹாங்கில் 56 பேரும் திரெங்கானு 62 பேரும் புத்ராஜெயாவில் 3 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 221,706 பேர் ஆவர். முதல் தவணை போட்டு முடித்தவர்கள் 177,876 பேர். இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 48,830 பேர் ஆவர்.