
செய்திகள் மலேசியா
அரசாங்கத்துக்கு அளித்து வரும் ஆதரவை அம்னோ விலக்கிக்கொள்ள வேண்டும்
கோலாலம்பூர்:
நாடாளுமன்றக் கூட்டம் உடனடியாக கூட்டப்படவில்லை எனில் பெரிக்கத்தான் நேசனல் அரசாங்கத்துக்கு அளித்து வரும் ஆதரவை அம்னோ விலக்கிக்கொள்ள வேண்டும் என அக் கட்சியின் உச்ச மன்ற உறுப்பினரான முஹம்மது புவாத் ஸர்கஷி Mohd Puad Zarkashi வலியுறுத்தி உள்ளார்.
அரசாங்கம் தாமதிக்கும் பட்சத்தில் கூட்டணி அரசில் இருந்து வெளியேற அம்னோவுக்கு இப்போது வலுவான காரணம் கிடைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
"நாடாளுமன்றம் உடனடியாக கூட்டப்படவில்லை எனில் பெரிக்கத்தான் நேசனல் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வதற்கான குறிப்பிட்ட தேதியை அம்னோ அறிவிக்க வேண்டும்.
"இதே காரணத்துக்காக அரசுக்கு எதிராக அம்னோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமையை வலியுறுத்திய இளைஞரணியை ஆதரிக்கிறேன். ஏனெனில் நாடாளுமன்றம் இயன்ற விரைவில் கூட்டப்பட வேண்டும் என்று மாமன்னரும் மலாய் ஆட்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
"எனவே, நடப்பு அரசாங்கத்துக்கு அளித்துவரும் ஆதரவை எந்த தேதியில் இருந்து திரும்பப் பெறப் போகிறோம் என்பதை அறிவிப்பதற்கான நடவடிக்கையை அம்னோ உச்ச மன்றம் விரைவுபடுத்த வேண்டும்.
"பெரிக்கத்தான் அரசாங்கம் நாட்டை ஆள்வதற்கு அம்னோ கடந்த ஓராண்டாக வாய்ப்பு வழங்கியுள்ளது. எனினும், இதற்கும் மேல் அரசாங்கத்தின் தோல்வி மற்றும் பிரதமரின் பிடிவாதத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தில் அம்னோ சிக்கிக்கொள்ளக் கூடாது," என்று Mohd Puad Zarkashi மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அம்னோ இளைஞர் பிரிவின் தலைவர் அஷ்ரஃப் வாஜிதி டுசுகி Asyraf Wajdi Dusuki மாமன்னரின் அறிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில், ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்பாக நாடாளுமன்றம் கூடுவது குறித்து, அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm