
செய்திகள் தமிழ் தொடர்புகள்
பாலியல் புகார்; முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது
சென்னை:
துணை நடிகை கொடுத்த பாலியல் புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தனிப்படை காவல் துறையினர் அதிகாலையில் பெங்களூருவில் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து அவரை ரகசிய இடத்தில் வைத்து காவல் துறையினர் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் அதிமுகவில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தவர்.
மலேசியாவைச் சேர்ந்த சாந்தினி என்பவர் தமிழ் சினிமாக்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். அவருடன் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். இருவருக்குள்ளும் மனக் கசப்பு ஏற்பட்டது. அவருக்கு தொல்லை தந்ததாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவரால் உண்டான கர்ப்பத்தைக் கலைத்ததாகவும் அடுக்கடுக்கான புகார்களுடன் சென்னை காவல் துறை ஆணையரிடம் சாந்தினி புகார் அளித்தார்.
அதன்பின் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவானார். இன்று அவரை தமிழகக் காவல்துறை கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் கைது செய்துள்ளனர். அவரை இன்றே சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்கப்படுவார் என்று போலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 5:53 pm
தூத்துக்குடியில் மிதவை கப்பலின் டேங்கை சுத்தம் செய்த 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
September 17, 2025, 4:04 pm
பெரியார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
September 15, 2025, 12:26 pm
வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை
September 13, 2025, 2:27 pm
விஜய் வருகையால் அதிர்ந்த திருச்சி: மரக்கடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
September 13, 2025, 7:32 am
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
September 12, 2025, 9:08 pm
நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
September 11, 2025, 10:54 pm
ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும்: சீமான்
September 10, 2025, 1:43 pm