செய்திகள் மலேசியா
4 மாநிலங்களுக்கு 18,702 புதிய ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்: கல்வி அமைச்சர் ராட்ஸி
கோலாலம்பூர்:
DG 41 தர புதிய ஆசிரியர்களை பணியமர்த்தப் போவதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
மூத்த கல்வி அமைச்சர் டத்தோ மொஹமத் ராட்ஸி இது குறித்து கூறுகையில், நாட்டில், குறிப்பாக நான்கு மாநிலங்களில் குறிப்பிட்ட சில பாடங்களுக்கான ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதாகக் கூறினார். மொத்தம் 18,702 சிறப்பு ஆசிரியர்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஜூலை 7 முதல் கல்வி அமைச்சகம் புதிய ஆசிரியர் சேர்ப்பு குறித்து விளம்பரப்படுத்தத் தொடங்கும் என்றார். முதல் கட்ட வேலைவாய்ப்புகள் அக்டோபர் மாதத்தில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
"இந்தப் புதிய வேலைவாய்ப்பு, ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் குறிப்பிட்ட சில பாடங்களைக் கற்பிப்பவர்கள் ஆகிய இரண்டின் அடிப்படையில் செய்யப்படுவதாகும்" என்று இன்று ஒரு மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அமைச்சர் கூறினார்.
புதிய ஆசிரியர்கள், குறிப்பாக ஆங்கிலம், வரலாறு, இஸ்லாமிய ஆய்வுகள், சிறப்பு கல்வித் திட்டம் போன்ற பாடங்களுக்கு சிலாங்கூர், ஜோகூர், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவதாக அமைச்சர் ராட்ஸி பட்டியலிட்டார்.
தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பு கற்பித்தல் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படாது என்றும், வேலைக்கு ஏற்றவர்களாக இருந்தால் மற்ற துறைகளைச் சேர்ந்தவர்களையும் வேலைக்கு அமர்த்துவதற்கு MoE திறந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
"கற்பித்தல் பட்டப்படிப்புகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால், புதிய ஆசிரியர்களுக்கான தேர்வில் மற்ற துறைகளைச் சேர்ந்தவர்களையும் கருத்தில் கொள்வோம்" என்று கல்வி அமைச்சர் ராட்ஸி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
