
செய்திகள் மலேசியா
2021ஆம் ஆண்டு முடிவுக்குள் மலேசியா மந்தை எதிர்ப்பு சக்தி கொண்ட நாடாகும்: நூர் ஹிஷாம் நம்பிக்கை
கோலாலம்பூர்:
2021ஆம் ஆண்டு முடிவுக்குள் மலேசியா மந்தை எதிர்ப்பு சக்தி கொண்ட நாடாக மாறிவிடும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
அநேகமாக நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்துக்குள் இந்த இலக்கை எட்ட முடியும் என அவர் கூறியதாக அஸ்ட்ரோ அவானி தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள தேசிய அளவிலான திட்டங்கள் மற்றும் தடுப்பூசி போடும் பணியின் விரிவாக்கங்களையும் கவனத்தில் கொண்டு பார்க்கும்போது தம்மால் இத்தகைய முடிவுக்கு வர முடிவதாக நூர் ஹிஷாம் கூறியுள்ளார்.
"தற்போது தடுப்பூசி பணிதான் முக்கியமானது. தடுப்பூசி போடப்படும் விகிதம் அதிகரிக்க இரண்டு அல்லது மூன்று மாத அவகாசம் அளிக்கப்பட வேண்டும். அதன் முடிவில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைய இயலும்.
"அதன் பின்னர் பள்ளிவாசலுக்குச் செல்வது, இதர சமய நிகழ்வுகளில் பங்கேற்பது ஆகியவற்றுக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன போன்ற முன்னெடுப்புகளை நாம் அமல்படுத்தலாம். பள்ளிவாசல் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை அனுமதிக்க இது உகந்த நேரமல்ல.
"தற்போது பத்து விழுக்காட்டுக்கும் குறைவான மலேசியர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதுதான் பிரச்சினை. இப்போதே சில நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிப்பது மக்களை கோபத்தை ஏற்படுத்தக்கூடும்.
"எனவேதான் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணையைச் செலுத்திக்கொண்ட பிறகு மாநிலங்களுக்கு இடையே அல்லது அனைத்துலகப் பயணங்களை மேற்கொள்ள அனுமதிப்பது சரியாக இருக்கும்.
"மேலும், மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கும் கூட தடுப்பூசி கடப்பிதழ் அவசியம் என்பதை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்," என்றார் டாக்டர் நூர் ஹிஷாம்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm