செய்திகள் மலேசியா
மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்ற இலக்கை அடைவோம்: பிரதமர் நம்பிக்கை
புத்ராஜெயா:
மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்ற இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளில் இருந்து வாங்கப்படும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட இலக்கை அடையமுடியும் என பிரதமர் கூறியுள்ளார்.
மேலும், அரசாங்கத்தால் வாங்கப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் உரிய நேரத்தில் மலேசியா வந்தடைவதை உறுதி செய்ய அரசு கடுமையாக முயற்சிக்கும் என்றார் பிரதமர்.
"தேசிய தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளரும் அமைச்சருமான ஜமாலுதீன் கைரி தேவையான தடுப்பூசிகள் கிடைக்கும் பட்சத்தில் இலக்குகளை அடையமுடியும் என்பதை பல முறை தெரிவித்துள்ளார். தடுப்பூசிகளை வாங்கக்கூடாது என்றோ அதை தடுக்கவேண்டும் என்பதோ அரசாங்கத்தின் எண்ணமல்ல.
"அனைத்தையும் ஒன்றிரண்டு மாதங்களில் முடித்துவிட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால் போதுமான தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை நிலவரம். தடுப்பூசி "விநியோகிப்பாளர்களை நம்மால் கட்டுப்படுத்த இயலாது. ஏனெனில், அவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.
எனவே, நமக்கான முறை வரும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். எனினும், நாம் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் தடுப்பூசிகள் வந்து சேரும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது.
"அதேவேளையில் தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு நடவடிக்கைகளை நாம் வேகப்படுத்தியாக வேண்டும். முன்பதிவுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து முன்பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காலை முதல் இரவு வரை அனைவரும் உத்வேகத்துடன் பணியாற்றுகிறார்கள்," என்றார் பிரதமர் மொஹிதீன் யாசின்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
