செய்திகள் மலேசியா
அரசியல் அமைப்பு நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்: டத்தோஸ்ரீ அஹமத் மஸ்லான்
கோலாலம்பூர்:
நாடாளுமன்றத்தை உடனே கூட்டவேண்டும் என்றும் இல்லையெனில் அரசியல் அமைப்பு நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அம்னோ பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ அஹமத் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தாமல் இருப்பது மாமன்னரின் ஆணைக்கு எதிராகச் செயல்படுவதாக ஆகிவிடும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
"எனவே, மாமன்னரின் கருத்தை அரசாங்கம் மிகத் தீவிரமானதாக கருதவேண்டும். மாமன்னர் தனது ஆணையைப் பிறப்பித்து விட்டார்.
எனினும், அதைச் செயல்படுத்துவதில் இன்னமும் கூட தாமதம் நிலவுகிறது. இத்தகைய செயல்பாடுகளை அரசியல் அமைப்பு நெருக்கடியாக கருதமுடியும். இப்படியொரு நிலை வரக்கூடாது என்பதே நமது விருப்பம். இது தவிர்க்கப்பட வேண்டும்.
"மாமன்னர் உத்தரவிட்ட உடனேயே ஜொகூர் மந்திரிபெசார் ஜொகூர் ஆட்சியாளரின் உத்தரவுப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிப்பதை கூட்டரசு பிரதேச அரசாங்கம் நல்ல உதாரணமாக கொள்ள வேண்டும். மாமன்னரின் ஆணையைப் பின்பற்றி ஒரு வாரத்துக்குள் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை மாவட்ட அளவில் நடத்தி உள்ளனர். இதில் எந்தப் பிரச்சினையும் எழவில்லை.
"எனவே, மாமன்னரின் ஆணையைச் செயல்படுத்த ஒன்றிரண்டு மாதங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒன்றிரண்டு வாரங்களில் செயல்படுத்த வேண்டும். நாடாளுமன்றக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கச் செய்ய வேண்டும். இதற்கு ஏதுவாக அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும்.
"மேலும் நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு 28 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட வேண்டும் எனும் நடைமுறையை குறைத்துக் கொள்ளல்லாம். ஏனெனில் பிரதமர் காலக்கெடுவைக் குறைத்து அறிவிப்பு வெளியிட முடியும்," என்று அம்னோ பொதுச்செயலர் டத்தோஸ்ரீ அஹமத் மஸ்லான் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
