செய்திகள் உலகம்
இந்தோனேசியாவில் தீவிரமாகி வரும் கொரோனா; கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன: இந்தோனேசிய சுகாதாரத்துறை
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி உள்ளதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை தரப்பில், “இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. அலுவலகங்களில் பணியாளர்களைக் குறைத்தல், மத வழிபாடுகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. தடுப்பூசி செலுத்தப்படுவது தீவிரப்படுத்தப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் நேற்று மட்டும் 13,737 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்தோனேசியாவில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவில் இதுவரை 8% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 12:15 pm
இந்தோனேசியக் கடலில் பரபரப்பு: டார்பிடோ வடிவிலான மர்மப் பொருள் கண்டுபிடிப்பு
April 10, 2026, 11:40 am
இந்தோனேசியா கூகுளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
April 10, 2026, 11:18 am
வாஷிங்டனில் இஸ்ரேல் - லெபனான் பேச்சுவார்த்தை: மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா?
April 10, 2026, 10:31 am
வளைகுடா அமைதிக்காக கைகோர்க்கும் அமெரிக்க - ஈரான் பிரதிநிதிகள்
April 9, 2026, 6:04 pm
இஸ்ரேலிய தாக்குதலில் லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது
April 9, 2026, 12:14 pm
ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் மீது 50 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்
April 9, 2026, 10:58 am
