நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

களை கட்டும் டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகளைக் காண 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி

டோக்கியோ: 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரம்மாண்ட விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளைக் காண பத்தாயிரம் பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் டோக்கியோ நகரில் அடுத்த மாதம் 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்காக டோக்கியோ நகர் அழகாக தயாராகி வருகிறது.

கொரோனா பரவல் சூழலில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால் கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை நேரில் காண்பதற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. 

இந்நிலையில் கொரோனாவால் 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி வழங்கி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

மேலும், போட்டியில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset