செய்திகள் மலேசியா
பிறந்தநாள் கொண்டாட்டம்: சபாவில் புதிய தொற்றுத் திரள்; 19 பேர் பாதிப்பு
கூச்சிங்:
பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வின் மூலம் சபா மாநிலத்தில் புதிய கொரோனா தொற்றுத்திரள் (cluster) உருவாகி உள்ளது.
மொத்தம் 19 பேருக்கு கிருமி தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
MCO 3.0 காலகட்டத்தில் ஒன்றுகூடல் நிகழ்வுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும் SOPக்களை மீறுவது வழக்கமாகி வருகிறது.
கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 60 வயது ஆடவருக்கு முதலில் கிருமி தொற்றியது. இதையடுத்து உருவான தொற்றுத்திரளில் 19 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
அந்த முதியவருக்கு The Apas Balung health clinic இல் கடந்த 16ஆம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது. முன்னதாக ஜூன் 13ஆம் தேதி முதல் அவருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்டன.
இதையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஒன்பது பேருக்கு ஜூன் 20ஆம் தேதி தொற்று உறுதியானது. இவர்கள் அனைவரும் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்றவர்கள் ஆவர்.
அதன் பின்னர் மேலும் ஒன்பது பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சபாவில் நேற்று புதிதாக 166 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,707ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 468 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,116 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
