செய்திகள் மலேசியா
பொதுத்தேர்தல் குறித்து பிரதமர் கோடிகாட்டினார்: டத்தோ உஸ்மான் சபியான்
கோலாலம்பூர்:
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் 15ஆவது பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஜோகூர் மாநில முன்னாள் முதல்வர் டத்தோ உஸ்மான் சபியான் Osman Sapian தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதின் யாசின் கோடிகாட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 16ஆம் தேதி இணையம் வழி நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் பங்கேற்ற போது பிரதமர் பேசியது தம்மை இவ்வாறு கருத வைத்ததாக டத்தோ உஸ்மான் கூறினார்.
"நிதிநிலை அறிக்கை தாக்கல் கூட்டரசு அளவில் நிறைவேறிய பின்னர் மாநிலங்களில் கவனம் செலுத்துவோம். இல்லையெனில் மாநிலங்கள் நிதிநிலை அறிக்கை நிறைவேற்ற காத்திருக்க வேண்டும்.
"எனவே, இந்த ஆண்டு இறுதியில் பொதுத்தேர்தல் நடத்தப்படக் கூடும். அநேகமாக நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடக்கக்கூடும்.
"எதுவும் முடியாத ஒன்றல்ல. இதற்கு முன்பும்கூட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பொதுத் தேர்தல்கள் நடந்துள்ளது. அதே சமயம் ஆண்டு இறுதியில் பருவ மழைக்காலம் என்பதால் அடுத்த ஆண்டு தொடக்கத்திலும் தேர்தல் நடைபெற வாய்ப்புண்டு.
"அரசாங்கம் வகுத்துள்ள இலக்குகளுக்கு ஏற்ப தொற்று எண்ணிக்கை குறையும் பட்சத்தில், நாட்டில் 80 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது எனில் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்படலாம்," என்றார் டத்தோ உஸ்மான் சபியான்.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
