செய்திகள் உலகம்
வடகொரியாவில் கொரோனா இல்லை என்று கூறுவது பொய்: உலக சுகாதார அமைப்பு
பியோங்யங்:
வடகொரியாவில் ஜூன் 10 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் யாருக்கும் கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் அந் நாடு தெரிவித்துள்ளது. ஆனால், இதில் உண்மை இல்லை என தற்போது தெரிய வந்துள்ளது. வடகொரியாவில் கொரோனா இல்லை என்று கூறுவது பொய் என்பதை உலக சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது.
ஜூன் மாதம் 10 ஆம் தேதிவரை சுமார் 30,000 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என உலக சுகாதார அமைப்புக்கு அளித்த அறிக்கையில் வடகொரியா சமீபத்தில் தெரிவித்திருந்தது.
ஆனால் உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு குழு வெளியிட்ட அறிக்கையில், “733 பேர் வடகொரியாவில் ஜூன் 4-10 தேதிகளில் பரிசோதிக்கப்பட்டனர், அவர்களில் 149 பேர் காய்ச்சல் மற்றும் கடுமையான சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார கட்டமைப்புகளில் பின்தங்கியதாக கருதப்படும் வடகொரியா கொரோனா தொற்றை எப்படி கையாள போகிறது என்று அச்சம் உலக நாடுகளிடம் ஏற்பட்டுள்ளது.
உலக முழுவதும் கொரோனா பரவியதைத் தொடர்ந்து வடகொரியா எல்லை மூடல், வர்த்தக தடை, சுற்றுலா பயணிகளுக்கு தடை போன்றவற்றை விதித்து பிற நாடுகளிலிருந்து தங்கள் நாட்டை தனிமைப்படுத்திக் கொண்டது. இதன் காரணமாக கடுமையான பொருளாதார பாதிப்பை வடகொரியா எதிர் கொண்டுள்ளது.
முன்னதாக, வடகொரியா தனது உள்நாட்டு விஷயங்கள் அனைத்தையுமே ராணுவ ரகசியம் போல் பாதுகாக்கும். அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை உலக நாடுகள் அவ்வளவு எளிதில் அறிந்துகொள்ள முடியாது. ஊடகங்களும் அரசுக் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன. இந் நிலையில், வடகொரியாவில் உணவுப் பஞ்சம் நிலவுவதாகத் தகவல்கள் கசிந்தன. இதையும் வடகொரியா மறைக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வடகொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதாக வெளியான தகவலை அதிபர் கிம் சில நாட்களுக்கு முன்னர் ஒப்புக் கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
