
செய்திகள் மலேசியா
தடுப்பூசிகள் கொள்முதல் நடவடிக்கைகளை அரசு செய்து முடித்துவிட்டது: பிரதமர் மொஹிதீன் யாசின்
கோலாலம்பூர்:
தடுப்பூசிகள் வாங்குவது, அதற்கான தொகையை செலுத்துவது ஆகிய நடவடிக்கைகளை மலேசிய அரசு செய்து முடித்துள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
மலேசியாவுக்கான தடுப்பூசிகளை வினியோகிக்கும் நிறுவனங்கள் அவற்றை வேகமாக வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
தேசிய தடுப்பூசித் திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சர்கள் அனைவரும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என தாம் உத்தரவிட்டிருப்பதாக பிரதமர் மொஹிதீன் யாசின் தெரிவித்தார்.
"தேசிய அளவில் இது குறித்து விவரித்துள்ளேன். தடுப்பூசி போடும் வீதத்தை நாள் ஒன்றுக்கு 400,000ஆக அதிகரிக்க வேண்டும்.
"தற்போது நாள் ஒன்றுக்கு 250,000 தடுப்பூசிகளை செலுத்தும் இலக்கை எட்டிப் பிடித்துள்ளோம்.
இந்த எண்ணிக்கையை மேம்படுத்த வேண்டியுள்ளது. எனினும் இது தடுப்பூசி வினியோகத்தைச் சார்ந்துள்ளது.
"தற்போது நாடு முழுவதும் தேவைப்படுவதை விட குறைவான தடுப்பூசிகளே உள்ளன.நாம் அவற்றை இன்னும் வாங்கவில்லை என்பதல்ல. நாம் வாங்கியுள்ளோம். அதற்கான தொகையையும் செலுத்தி உள்ளோம்.
"அந்த தடுப்பூசிகள் இன்னும் வந்து சேரவில்லை என்பதுதான் நிலைமை. ஏனெனில் உலகம் முழுவதும் அத்தடுப்பூசிகளுக்கான தேவை உள்ளது," என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பிரதமர் குறிப்பிட்டார்.
"பல்வேறு தடுப்பூசி மையங்கள் அன்றாடம் போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தயாராக உள்ளன. எனினும் போதுமான தடுப்பூசிகள் வந்து சேராததால் அது சாத்தியமாகவில்லை," என்றார் பிரதமர் மொஹிதீன் யாசின்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm