செய்திகள் மலேசியா
தடுப்பூசிகள் கொள்முதல் நடவடிக்கைகளை அரசு செய்து முடித்துவிட்டது: பிரதமர் மொஹிதீன் யாசின்
கோலாலம்பூர்:
தடுப்பூசிகள் வாங்குவது, அதற்கான தொகையை செலுத்துவது ஆகிய நடவடிக்கைகளை மலேசிய அரசு செய்து முடித்துள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
மலேசியாவுக்கான தடுப்பூசிகளை வினியோகிக்கும் நிறுவனங்கள் அவற்றை வேகமாக வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
தேசிய தடுப்பூசித் திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சர்கள் அனைவரும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என தாம் உத்தரவிட்டிருப்பதாக பிரதமர் மொஹிதீன் யாசின் தெரிவித்தார்.
"தேசிய அளவில் இது குறித்து விவரித்துள்ளேன். தடுப்பூசி போடும் வீதத்தை நாள் ஒன்றுக்கு 400,000ஆக அதிகரிக்க வேண்டும்.
"தற்போது நாள் ஒன்றுக்கு 250,000 தடுப்பூசிகளை செலுத்தும் இலக்கை எட்டிப் பிடித்துள்ளோம்.
இந்த எண்ணிக்கையை மேம்படுத்த வேண்டியுள்ளது. எனினும் இது தடுப்பூசி வினியோகத்தைச் சார்ந்துள்ளது.

"தற்போது நாடு முழுவதும் தேவைப்படுவதை விட குறைவான தடுப்பூசிகளே உள்ளன.நாம் அவற்றை இன்னும் வாங்கவில்லை என்பதல்ல. நாம் வாங்கியுள்ளோம். அதற்கான தொகையையும் செலுத்தி உள்ளோம்.
"அந்த தடுப்பூசிகள் இன்னும் வந்து சேரவில்லை என்பதுதான் நிலைமை. ஏனெனில் உலகம் முழுவதும் அத்தடுப்பூசிகளுக்கான தேவை உள்ளது," என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பிரதமர் குறிப்பிட்டார்.
"பல்வேறு தடுப்பூசி மையங்கள் அன்றாடம் போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தயாராக உள்ளன. எனினும் போதுமான தடுப்பூசிகள் வந்து சேராததால் அது சாத்தியமாகவில்லை," என்றார் பிரதமர் மொஹிதீன் யாசின்.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
