செய்திகள் இந்தியா
கடன்வாங்கி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் சொத்துக்களில் ரூ.8,441 கோடி பொதுத்துறை வங்கிக்கு மாற்றம் : அமலாக்கத்துறை
புதுடெல்லி :
வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் இருந்து முடக்கப்பட்ட சொத்துக்களில்ரூ.8,441கோடியை அவர்களால் பாதிக்கப்பட்டு கடுமையான நிதி சூழலில் இருக்கும் பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் தங்களது நிறுவனங்களின் பெயர்களில் கடன்களை வாங்கிக் கொண்டு அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டனர்.
இதனால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சுமார் ரூ.22 ஆயிரத்து 585 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும்இது தொடர்பாக சிபிஐயும் வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் நேற்று ஒரு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மேற்கண்ட மூன்று குற்றவாளிகளின் உள்ளூர் மற்றும் வெளிநாடுகள் தொடர்பான பணப் பரிவர்த்தனைகள் குறித்து தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வரப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவிலுள்ள மூவருக்கும் சொந்தமான சுமார் ரூ.18 ஆயிரத்து 170 கோடி மதிப்பிலான சொத்துக்களையும், வெளிநாட்டிலுள்ள ரூ.969 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் முடக்கும் பணிகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இதையடுத்து இந்த விவாகாரம் குறித்து தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த சொத்துக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட மூன்று குற்றவாளிகளின் போலி பெயர்கள், மூன்றாவது நபர்கள் மற்றும் உறவினர்களின் பெயர்களில் வாங்கி குவித்து இருப்பது தெரியவந்துள்ளது.
இதைத்தவிர விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகிய மூன்று குற்றவாளிகளும் பிரிட்டன், ஆன்டிகுவா, பார்டுடா ஆகிய நாடுகளில் தற்போது இருந்து வருவதால் அவர்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையில் மூன்று குற்றவாளிகளிடம் இருந்து முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து சுமார் ரூ.8ஆயிரத்து 441 கோடியை மதிப்பிலான நிதி தொகையை அவர்களால் பாதிக்கப்பட்டு கடுமையான நிதி சூழலில் இருக்கும் பொதுத்துறை வங்கிகளுக்கு தற்போது பிரித்து வழங்கப்பட்டு, அதுகுறித்த பரிமாற்றமும் செய்திருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
