செய்திகள் மலேசியா
சமூக வலைத்தளம் மூலம் பொய் தகவல் பரப்பிய மருத்துவருக்கு 5,000 ரிங்கிட் அபராதம்
கோலாலம்பூர்:
சினோவேக் தடுப்பூசி குறித்து சமூக வலைத்தளங்களில் துல்லியமற்ற, தவறான தகவல்களைப் பதிவிட்டதற்காக மருத்துவர் ஒருவருக்கு 5 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
“UiDM Polimas” என்ற பெயரில் முகநூலில் இயங்கிய ஜம்னுல் அஸ்ஹர் முல்கன் Jamnul Azhar Mulkan என்ற அந்த மருத்துவர் காணொலி ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இதன் மூலம் பொதுமக்களை அச்சமூட்டும் வகையில் பொய் தகவல்களைப் பரப்பியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டதாக ஹரியான் மெட்ரோ ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
பாடாங் பெசாரில் உள்ள Beseri clinicஇல் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அன்று அந்தக் காணொலியை அவர் எடுத்துள்ளார்.
இதையடுத்து அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் சட்டப்பிரிவின் கீழ் ஜம்னுல் அஸ்ஹர் (Jamnul Azhar Mulkan) மீது குற்றம்சாட்டப்பட்டது.
தன் மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது அதனை ஏற்றுக்கொண்டார் Jamnul.
எகிப்தில் மருத்துவம் படித்துள்ள Jamnul, சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார் என்றும் அவருக்கு 15 முதல் 30 வயதுக்குட்பட்ட எட்டு குழந்தைகள் இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்துக்குப் பின்னர் அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவதாக அவரது வழக்கறிஞர் குறிப்பிட்ட நிலையில், நீதிமன்ற நடவடிக்கைக்குப் பின் அவர் அபராதத் தொகையைச் செலுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன
April 10, 2026, 3:32 pm
பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு: 60 வயது முதியவர் உடல் கருகிய நிலையில் மீட்பு
April 10, 2026, 3:23 pm
பெலூரானில் 157 மாணவர்கள் தவிப்பு: வெயிலிலும் மழையிலும் கூடாரத்தின் கீழ் கல்வி பயிலும் அவலம்
April 10, 2026, 12:55 pm
