செய்திகள் இந்தியா
உலகிலேயே கொரோனா சிகிச்சை பொருட்களுக்கு இந்தியாவில்தான் அளவுக்கு அதிகமான இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது
டெல்லி:
கொரோனா தொடர்பான மருத்துவ பொருட்களுக்கு உலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவு இறக்குமதி வரி விதிக்கப்படுவது ஆய்வு ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சீனாவுடன் ஒப்பிடுகையில் 2 மடங்கும் அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது 7 மடங்கு அதிகமாகவும் ஒன்றிய அரசு இயக்குமதி வரி விதிக்கிறது.
மும்பையில் உள்ள இந்திரா காந்தி மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உதாரணமாக இறக்குமதியாகும் கொரோனா தொடர்பான சிகிச்சை பொருட்களுக்கு இந்திய அரசு 15.2% இறக்குமதி வரி விதிக்கிறது. சீனாவை ஒப்பிடும் போது இது 2 மடங்கு அதிகமாகும்.
அமெரிக்காவை ஒப்பிட்டால் இறக்குமதி வரி இந்தியாவில் 7 மடங்கு அதிகமாகி உள்ளது. வருவாய் குறைவாக ஊழல் ஆப்ஃகானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளை விட சுமார் 60% அளவிற்கு இந்தியாவில் இறக்குமதி வரி அதிகம் உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கிருமிநாசினி மற்றும் சுத்தப்படுத்தும் பொருட்களுக்கு இந்திய ஒன்றிய அரசு 55.8% இறக்குமதி வரி விதிக்கிறது. ஆனால், சீனாவிலோ வெறும் 11.5% தான் இறக்குமதி வரி. அமெரிக்காவிலோ மிகக்குறைவாக 2% மட்டுமே இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகள் கூட 17.5% மட்டுமே இறக்குமதி வரியாக வசூலிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
April 9, 2026, 6:01 pm
1.5 லட்சத்திற்கு விலை பேசப்பட்ட பிஞ்சு உயிர்; ராஜ்கோட்டில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு
April 9, 2026, 6:00 pm
ஆக்ராவில் சோகம்: காணாமல் போன 3 வயது சிறுமி சாக்கடையில் சடலமாக மீட்பு
April 9, 2026, 5:59 pm
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 71 வயது முதியவர் கைது
April 9, 2026, 5:30 pm
கர்நாடகாவில் மற்றுமொரு சோகம்: சந்திரத்ரோணா மலைப்பகுதியில் கேரள மாணவி மாயம்
April 8, 2026, 5:59 pm
ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவன் கொலை
April 8, 2026, 5:44 pm
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்: மிசோரம் சென்ற வங்காள இளைஞர்கள் சடலமாக மீட்பு
April 8, 2026, 12:06 pm
