நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் இன்று கொரொனா தொற்று நோயாளிகள் 5841; சிலாங்கூர் 2,072

கோலாலம்பூர்:

மலேசியாவில் இன்று புதிதாக 5,841 பேருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. 

இன்றும் அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,072 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இரண்டாம் இடத்தில் நெகிரி செம்பிலான் 781 பேருடன் பதிவு செய்துள்ளது.

மூன்றாவது இடத்தில் இன்று சரவாக் 581 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

கோலாலம்பூரில்  552 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 

ஜொகூரில் 346 பேரும் கெடாவில் 271 பேரும் மலாக்காவில் 247 பேரும் சபாவில் 203 பேரும் கிளந்தானில் 135 பேரும் லபுவானில் 212 பேரும் பினாங்கில் 108 பேரும் பேராக்கில் 120 பேரும்  பஹாங்கில் 162 பேரும் புத்ராஜெயாவில் 17 பேரும் பெர்லிஸில் 5 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset