செய்திகள் மலேசியா
மேலும் ஒரு பொருளாதார ஊக்குவிப்புத் உதவித் திட்டம் பிரதமரால் விரைவில் அறிவிக்கப்படும்: கைரி ஜமாலுதீன்
கோலாலம்பூர்:
மக்களுக்கு உதவும் வகையில் மேலும் ஒரு பொருளாதார ஊக்குவிப்புத் உதவித் திட்டம் பிரதமரால் விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
எனினும் அதுகுறித்த மேலதிக விவரங்களை தற்போது தெரிவிக்க இயலாது என்று அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவரிடம், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர போராடும் தொழில்களுக்கு உதவும் வகையில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்தபோதே அமைச்சர் கைரி பிரதமர் புதிதாக அறிவிக்க உள்ள மிகப்பெரிய உதவித் தொகுப்புப் பற்றிக் குறிப்பிட்டார்.
முன்னதாக கடந்த மே 31ஆம் தேதி 40 பில்லியன் ரிங்கிட் உள்ள உதவித் தொகுப்பை, முழு முடக்க நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அறிவித்திருந்தார் பிரதமர். மேலும், இதற்கு முன்பு 340 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மேலும் பல பொருளாதார ஊக்குவிப்பு, உதவி தொகுப்பை நடப்பு அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இந் நிலையில் பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதீன் யாசின் அறிவிக்க உள்ள புதிய உதவித் தொகுப்பு குறித்து அறிய பல்வேறு தரப்பினரும் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே, நடப்பாண்டு மலேசியா 4.5 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை எட்டிப் பிடிக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. ஏற்கெனவே அவ் வங்கி இத்தகைய ஒரு கணிப்பை வெளியிட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
