செய்திகள் மலேசியா
Gardenia ரொட்டி தொழிற்சாலையில் மனிதவள அமைச்சர் சோதனை
பூச்சோங்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பணி இடங்களில் இருந்தும் தொழிற்சாலைகளில் இருந்தும் பரவுவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதனை மனிதவள அமைச்சு கூர்ந்து கவனித்து வருவதோடு அவ்வப்போது சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இன்று தெரிவித்தார்.
இன்று காலை பூச்சோங்கில் இயங்கும் கார்டெனியா ரொட்டி தொழிற்சாலையில் தனது அமைச்சு அதிகாரிகளுடன் அமைச்சர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டார்.
அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர், "நாடுமுழுவதும் இயங்கும் தொழிற்சாலைகளில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 1175 நிறுவனங்கள் மீது சோதனைகள் நடத்தப்பட்டு இருக்கின்றது. கொரோனா பரவல் தொழிலிடங்களில் இருந்து பரவுவதாக புகார்கள் பெற்று வருவதால் இந்த நடவடிக்கையை மனிதவள அமைச்சு மேற்கொண்டு வருகிறது.
"சோதனை மேற்கொண்ட 1175 நிறுவனங்கள், அரசு கூறும் விதிமுறைகள் மீறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால் ஏறக்குறைய 12 லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
"இதன்முலம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சியும் தொழிற்சாலை நடத்தும் முதலாளிகள் விதிமுறைகள் மீறாமல் நடந்துகொள்வதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நமது அடிப்படை நோக்கம், தொடர் நடவடிக்கை மூலம் வேலை இடங்களிலிருந்து நோய்த்தொற்று பரவுவதை தடுப்பதாகும். அதேநேரத்தில் தொழிலாளர்களின் நலன் பேணுவதற்குமான முயற்சியாகும். இதற்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்" என்றார் அமைச்சர்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
