செய்திகள் இந்தியா
‘‘வண்டி குதிரையை இழுக்காது; குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டும்; காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்குங்கள்; பிறகு தேர்தல் பற்றி பேசுங்கள்’’: ப. சிதம்பரம்
புதுடில்லி:
'குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டும்... வண்டியால் குதிரையை இழுக்க முடியாது. ஜம்மு - காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும்' என, ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசுத் தரப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு -காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சி தலைவர்கள், 'ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்' என வலியுறுத்தினர். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளதாவது:
காங்கிரஸ் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கட்சிகள் மற்றும் தலைவர்கள் முதலில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என விரும்புகின்றனர்; பின்னர் தேர்தல்களை நடத்தலாம் என்கிறார்கள். மத்திய அரசின் பதில் முதலில் தேர்தல், பின்னர் மாநில அந்தஸ்து எனக் கூறுகிறது.
"குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டும். ஜம்மு - காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். அதன் பின் தேர்தல் நடத்த வேண்டும். மாநில அரசு தான் சரியான முறையில் தேர்தலை நடத்த முடியும். ஆனால் மத்திய அரசோ முதலில் தேர்தல் நடத்த முயலுகிறது. வண்டியால் குதிரையை இழுக்க முடியாது."
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
