செய்திகள் இந்தியா
தலிபான் இயக்கத்துடன் இந்தியா பேச்சு?: அனைத்துலக அரங்கில் சலசலப்பு
புதுடெல்லி:
தலிபான் இயக்கத்துடன் இந்திய அரசு ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவல் அனைத்துலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்தப் பேச்சுவார்த்தை எனும் கேள்வியும் எழுந்துள்ளது.
அண்மையில் கத்தார் நாட்டில் இருதரப்பினரும் சந்தித்துப் பேசியதாகவும் அதன் பின்னணியில் இருப்பது யார் என்பது தெரியவில்லை என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தைக்கு தாம் ஏற்பாடு செய்ததாக சில மாதங்களுக்கு முன்னர் கத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அச் சமயம் இந்தியா இதை உறுதி செய்யவில்லை.

இதற்கிடையே தாலிபான் இயக்கத்துடன் இந்திய அரசு மறைமுக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா, தனது படைகளை முழுவதுமாகத் திரும்பப் பெறும் திட்டம் சுட்டிக்காட்டப்படுகிறது.
அவ்வாறு அமெரிக்கா முழுமையாக வெளியேறும் பட்சத்தில் ஆப்கானிஸ்தானில் இதுவரை ஏற்படுத்தி உள்ள தாக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில் உள்ள அம்சங்களையும் இழக்க இந்திய அரசு விரும்பவில்லை என்றும் அதன் காரணமாகவே தாலிபான் இயக்கத்துடன் பேச்சுவார்த்தைக்கான தொடர்புகளை ஏற்படுத்த இந்தியா விரும்புகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஆப்கானிஸ்தானில் ஏற்படும் மாற்றங்கள் காஷ்மீரில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த அனுமதித்துவிடக்கூடாது என்பதில் இந்திய அரசு கவனமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
