செய்திகள் மலேசியா
இமிக்ரேஷன் அதிகாரிக்கு 35 ஆயிரம் ரிங்கிட் அபராதம்: கோலாலம்பூர் நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர்:
சட்டத்துக்கு விரோதமாக வியட்னாம் குடிமக்களை மலேசியாவுக்குள் கொண்டுவர லஞ்சம் பெற்ற இமிக்ரேஷன் அதிகாரிக்கு 35 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாலிஹான் ஜொஹாரி Solihan Johari என்ற அந்த 37 வயது ஆடவர் தன் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதை ஒப்புக்கொண்டார். மேலும், தமக்கு குறைந்த தண்டனை வழங்கவும் வேண்டுகோள் விடுத்தார்.
44 வயதான லியூ Lew என்ற நபர் வியட்னாமில் இருந்து மலேசியாவில் வேலை பார்க்க பலரை அழைத்து வந்துள்ளதாகவும், அது தொடர்பான விசா மற்றும் பெர்மிட்டுகளை மலேசிய குடிநுழைவுத் துறையிடம் இருந்து பெறுவதில் ஒத்துழைக்குமாறு சாலிஹான் ஜொஹாரியைக் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக அவருக்கு 21 ஆயிரம் ரிங்கிட் தொகையை லஞ்சமாகக் கொடுத்துள்ளார் Lew. இதற்காக இதற்காக Lew தனது பெயர்களில் உள்ள வங்கிக் கணக்குக்கான பணம் எடுக்கும் ATM அட்டையை சாலிஹான் ஜொஹாரியிடம் கொடுத்து வைத்திருந்தார்.
தமது குற்றத்தை ஒப்புக் கொண்ட சாலிஹான் ஜொஹாரி Solihan Johari க்கு நீதிபதி 35 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிப்பதாகவும், அதைச் செலுத்தத் தவறினால் மூன்று மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தமது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு 27 இமிக்ரேஷன் அதிகாரிகள் உள்ளிட்ட 46 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது. நாட்டின் எல்லையை போலி முத்திரைகளை பயன்படுத்தி பல வெளிநாட்டவர்கள் மலேசியாவுக்கு வந்து செல்ல உதவிய சட்டவிரோத கும்பலுக்கு உடந்தையாக இருந்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
