
செய்திகள் மலேசியா
இமிக்ரேஷன் அதிகாரிக்கு 35 ஆயிரம் ரிங்கிட் அபராதம்: கோலாலம்பூர் நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர்:
சட்டத்துக்கு விரோதமாக வியட்னாம் குடிமக்களை மலேசியாவுக்குள் கொண்டுவர லஞ்சம் பெற்ற இமிக்ரேஷன் அதிகாரிக்கு 35 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாலிஹான் ஜொஹாரி Solihan Johari என்ற அந்த 37 வயது ஆடவர் தன் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதை ஒப்புக்கொண்டார். மேலும், தமக்கு குறைந்த தண்டனை வழங்கவும் வேண்டுகோள் விடுத்தார்.
44 வயதான லியூ Lew என்ற நபர் வியட்னாமில் இருந்து மலேசியாவில் வேலை பார்க்க பலரை அழைத்து வந்துள்ளதாகவும், அது தொடர்பான விசா மற்றும் பெர்மிட்டுகளை மலேசிய குடிநுழைவுத் துறையிடம் இருந்து பெறுவதில் ஒத்துழைக்குமாறு சாலிஹான் ஜொஹாரியைக் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக அவருக்கு 21 ஆயிரம் ரிங்கிட் தொகையை லஞ்சமாகக் கொடுத்துள்ளார் Lew. இதற்காக இதற்காக Lew தனது பெயர்களில் உள்ள வங்கிக் கணக்குக்கான பணம் எடுக்கும் ATM அட்டையை சாலிஹான் ஜொஹாரியிடம் கொடுத்து வைத்திருந்தார்.
தமது குற்றத்தை ஒப்புக் கொண்ட சாலிஹான் ஜொஹாரி Solihan Johari க்கு நீதிபதி 35 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிப்பதாகவும், அதைச் செலுத்தத் தவறினால் மூன்று மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தமது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு 27 இமிக்ரேஷன் அதிகாரிகள் உள்ளிட்ட 46 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது. நாட்டின் எல்லையை போலி முத்திரைகளை பயன்படுத்தி பல வெளிநாட்டவர்கள் மலேசியாவுக்கு வந்து செல்ல உதவிய சட்டவிரோத கும்பலுக்கு உடந்தையாக இருந்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm