செய்திகள் மலேசியா
இந்தியா, சிங்கப்பூர் இடையே மீண்டும் பறக்கும் 'வந்தே பாரத்' விமானங்கள்
சிங்கப்பூர்:
இந்தியாவில் இருந்து தினந்தோறும் 25 பயணிகள் விமானம் மூலம் சிங்கப்பூர் வந்தடைகின்றனர் என்று ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
இவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர வசிப்பிட உரிமம் பெற்றவர்கள் ஆவர். அதபோல் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லும் விமானத்தில் நாள்தோறும் சராசரியாக 180 பயணிகள் செல்வதாக தெரியவந்துள்ளது.
இந்திய அரசு வெளிநாடுகளில் சிக்கி உள்ள தனது குடிமக்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்கள் மூலம் திரும்ப அழைத்து வருகின்றன. அந்த வகையில் பல்வேறு நாடுகளுக்கு இந்த விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சிங்கப்பூர் அரசின் அனுமதியுடன் சாங்கி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தின் மூலம் வந்தே பாரத் விமானங்கள் இயக்கப்படுவது தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் B1617 கொரோனா திரிபு தாக்கம் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில் இந்தச் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. சாங்கி விமான நிலையத்தில் நூற்றுக்கும் அதிகமான ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில், சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா திரிபு கண்டறியப்பட்டதாகவும் அங்கிருந்து வரக்கூடிய விமானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் சிங்கப்பூர்-இந்தியா இடையே வந்தே பாரத் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன
April 10, 2026, 3:32 pm
பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு: 60 வயது முதியவர் உடல் கருகிய நிலையில் மீட்பு
April 10, 2026, 3:23 pm
பெலூரானில் 157 மாணவர்கள் தவிப்பு: வெயிலிலும் மழையிலும் கூடாரத்தின் கீழ் கல்வி பயிலும் அவலம்
April 10, 2026, 12:55 pm
