செய்திகள் மலேசியா
4 தெற்காசிய நாடுகளில் இருந்து மலேசியா வருபவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்
கோலாலம்பூர்:
தெற்காசியாவைச் சேர்ந்த 4 நாடுகளில் இருந்து மலேசியா வரக்கூடியவர்கள் கட்டாயமாக 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என மலேசிய அரசு அறிவித்துள்ளது.
இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேப்பாளம் ஆகிய 4 நாடுகளில் இருந்து மலேசியா வரும் மலேசியக் குடிமக்களுக்கும் இத் தனிமைப்படுத்தல் உத்தரவு பொருந்தும் என மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தியாவில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு மட்டுமே 21 நாள்கள் தனிமைப்படுத்தும் நடைமுறை அமலில் இருந்தது.
இந் நிலையில் பல்வேறு நாடுகளிலும் தொற்று பாதிப்பு அதிகரிப்பதை அடுத்து மலேசிய அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.
இதற்கிடையே இந்தக் குறிப்பிட்ட நாடுகள் அல்லாமல் பிற நாடுகளில் இருந்து மலேசியா வருபவர்கள் முன்பு 10 நாள் தனிமைப்படுத்தல் நடைமுறையைப் பின்பற்ற வேண்டி இருந்தது. தற்போது அது 14 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மலேசியா வருவதற்கு 3 நாட்களுக்கு முன்பே கொரோனா தொற்றுப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், அதில் தொற்றுப் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் மலேசியா வரும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், மலேசியா வந்த பிறகும் அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
