செய்திகள் மலேசியா
வீடு வீடாகச் சென்று பரிசோதனை: சிலாங்கூர் அரசாங்கம் பரிசீலனை
ஷா ஆலம்:
சிலாங்கூர் மாநிலத்தில் வீடு வீடாகச் சென்று கொரோனா கிருமித்தொற்று பரிசோதனை செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமீருதீன் ஷாரி தெரிவித்துள்ளார்.
எனினும், இது மிகப்பெரிய திட்டம் என்றும் இதைச் செயல்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட வேண்டும் என்றும் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
"வீடு வீடாகச் சென்று கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள மிகப்பெரிய குழு தேவைப்படும். அப்போதுதான் இத் திட்டம் சாத்தியமாகும். எனவே, எத்தனை பேர் இதில் பங்கேற்க உள்ளனர் என்பது தெரியவேண்டும். மனித ஆற்றல் தன்னார்வலர்களின் எண்ணிக்கையைச் சார்ந்தே இந்த ஆலோசனையைச் செயல்படுத்த முடியும்," என்றார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி.
கடந்த சில தினங்களாக நாட்டிலேயே கொரோனா கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக சிலாங்கூர் உள்ளது. அங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அன்றாடம் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையடுத்து தொற்றுப் பரவலைத் தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
