
செய்திகள் மலேசியா
முழுமையான விசாரணை நடத்தப்படும்: அனுவார் மூசா, வீ கா சியோங்
கோலாலம்பூர்:
ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று டான்ஸ்ரீ அனுவார் மூசா கூறியுள்ளார்.
இந்த விபத்துக்கு கட்டுப்பாட்டாளரின் அலட்சியம் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
"இன்றிரவு நிகழ்ந்த விபத்துக்கான காரணம் குறித்து மிகக் கவனமாக விசாரணை நடத்தப்படும். குறிப்பாக கட்டுப்பாட்டுக் கோபுரத்தில் அலட்சியமான செயல்பாடு நிகழ்ந்துள்ளதா என்பது கண்டறியப்படும். பொதுமக்களின் பாதுகாப்புக்குத்தான் எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும்," என்று அனுவார் மூசா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறு டத்தோஸ்ரீ டாக்டர் WEE KA SIONG உத்தரவிட்டுள்ளார்.