செய்திகள் மலேசியா
முஸ்லிம் அல்லாதோரின் இறுதிச் சடங்குகளை அவரவர் வழக்கப்படி மேற்கொள்ள தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி: டத்தோஸ்ரீ எம். சரவணன்
கோலாலும்பூர்:
மே 12 முதல் ஜுன் 7 வரை, நடமாட்டக் கட்டுப்பாடு 3.0 காலகட்டத்தில், முஸ்லிம் அல்லாதோரின் இறுதிச் சடங்குகளை அவரவர் வழக்கப்படி மேற்கொள்ள தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி வழங்கியது.
இறுதிச் சடங்கில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய நடைமுறைகளையும், அரசாங்கத்தின் நடமாட்டக் கட்டுப்பாடு விதிமுறைகளையும் அமைச்சு வெளியிட்டுள்ளது. ஒற்றுமை அமைச்சின் இந்தத் தகவலை மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் உறுதிப்படுத்தினார்.
இறுதிச் சடங்குகளில் கடைப்பிடிக்க வேண்டிய நடமாட்டக் கட்டுப்பாடு விதிமுறைகளை, ஒற்றுமை அமைச்சு விரிவாகக் குறிப்பிட்டிருந்தது. முஸ்லிம் அல்லாதோர் வீட்டில், வழிபாட்டுத்தலங்களில் மற்றும் தகனம் செய்யும் இடத்தில் அல்லது மயானத்தில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய நடைமுறைகள் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன.
வீட்டில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய நடைமுறைகள் :-
– சடலத்தைக் குளிப்பாட்டி, உடை அணிவித்துத் தயார் செய்ய 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
– இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவ; வீட்டின் அளவைப் பொறுத்து மாறுபடலாம்
– சடலத்தைத் தகனம் செய்ய அல்லது மயானத்திற்கு 20 பேருக்கு மேல் போகாத நெருங்கிய உறவினர்கள் மட்டுமே செல்ல முடியும்.
தகனம் செய்யும் இடத்தில் அல்லது மயானத்தில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய நடைமுறைகள் :-
– சடலத்தைத் தகனம் செய்ய அல்லது மயானத்திற்கு 20 பேருக்கு மேல் போகாத நெருங்கிய உறவினர்கள் மட்டுமே செல்ல முடியும்.
– ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் நடைபெறும் கருமக்கிரியை சடங்கில் நெருங்கிய உறவினர்கள் 5 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
“நடமாட்டக் கட்டுப்பாடு காலகட்டத்தில் அரசாங்கம் வழங்கியிருக்கும் இந்தச் சலுகையை முறையாக, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு உட்பட்டு, நம்மை விட்டுப் பிரிந்து போன சொந்த பந்தங்களுக்கு உரிய இறுதி மரியாதையைச் செலுத்த வேண்டும்” என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
