செய்திகள் மலேசியா
எல்ஆர்டி விபத்து: முன்களப் பணியாளர்களுக்கும் விபத்தில் சிக்கியோருக்கும் இலவச பானங்கள் அளித்த உணவகம்
கோலாலம்பூர்:
எல்.ஆர்.டி. விபத்துப் பகுதியில் மீட்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட முன்களப் பணியாளர்களுக்கு அருகில் இருந்த உணவகங்கள் இலவச பானங்களை வழங்கின. இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனர்.
NZ curry house உணவகம் நேற்று விபத்து நிகழ்வதற்கு முன்பே பணிநேரம் முடிந்து மூடப்பட்டு விட்டது. எனினும் விபத்து குறித்து அறிந்ததும் அந்த உணவகத்தின் நிர்வாகம் உடனடியாக மீட்பு மற்றும் இதர பணிகளில் ஈடுபட்டிருந்த முன்களப் பணியாளர்களுக்கு இலவச பானங்களை வழங்கி துணை நின்றது.
தனது முதலாளி முஹம்மது ஜபிடி, இரவு தொடர்பு கொண்டு பேசியதாகவும் உடனடியாக தேநீர், நெஸ்கஃபே ஆகியவற்றை தயாரித்து விபத்துப் பகுதிக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டதாகச் சொல்கிறார் NZ curry house உணவகத்தின் மேற்பார்வையாளரான சிராஜுதீன் அப்துல் ஜபார் கூறுகிறார்.
இந்த உணவகம் விபத்து பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் ஜாலான் அம்பாங்கில் அமைந்துள்ளது.
"இந்த விபத்து குறித்து நாங்கள் கவலை கொண்டோம். ஏதேனும் ஒரு வகையில் உதவ விரும்பினோம். அந்த இரவு வேளையில் அருகே எந்தக் கடையும் திறந்திருக்காது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக அவை மூடப்பட்டிருக்கும்.
"முன்களப் பணியாளர்களுக்கும் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் தாகமெடுத்தால் அதை எப்படி தணித்துக்கொள்ள முடியும்? அவர்களால் எங்கே பானங்களை வாங்க முடியும்? எனவேதான், எங்கள் உணவக முதலாளி ஜபிடி இலவசமாக பானங்களை சம்பவ இடத்திற்கு உடனடியாக கொண்டு சென்று சேர்க்க துரிதப்படுத்தினார்; நாங்களும் வழங்கினோம் என்று மேற்பார்வையாளர் சிராஜுதீன் மேலும் கூறியுள்ளார்.
இந்த நல்லெண்ண அடிப்படையிலான செயல்பாடு மனதை நெகிழ வைப்பதாக உள்ளது என பிரசாரனா மலேசியா பெர்ஹாடின் இயக்குனர் இஷாக் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
