செய்திகள் மலேசியா
மோசமான தாக்கத்தை எதிர்கொள்ள மலேசியர்கள் தயாராக வேண்டும்: நூர் ஹிஷாம்
கோலாலம்பூர்:
கொரோனா அலையின் மிக மோசமான தாக்கத்தை எதிர்கொள்ள மலேசியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை ஒட்டி அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
"கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கும் புதிய தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. எனவே, மோசமான கட்டத்தை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். தயவுசெய்து வீட்டில் தங்கியிருந்து எங்களுக்கு உதவுங்கள். இணைந்து செயல்பட்டால்தான் தொற்றுச் சங்கிலியை உடைக்க முடியும்," என்று தமது அலுவல் டுவிட்டர் பக்கத்தில் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் கேட்டுக் கொண்டுள்ளார்.
SOPகளை முறையாகக் கடைப்பிடிப்பதுடன் பொதுமக்கள் வீட்டில் இருந்து தேவையின்றி வெளியே வருவதை அறவே தவிர்க்க வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.
மலேசியாவில் இன்று புதிய உச்சமாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
