செய்திகள் மலேசியா
மலேசியா இன்று 7,478 புதிய கோவிட் -19 தொற்றுக்களை பதிவு செய்துள்ளது: நூர் ஹிஷாம் அப்துல்லாஹ்
கோலாலம்பூர்:
கடந்த 24 மணி நேரத்தில் 7,478 கோவிட் -19 தொற்றுகளுடன் மற்றொரு புதிய சாதனையை மலேசியா எட்டி இருக்கின்றது.
இன்று மதியம் நிலவரப்படி 2,455 ஆக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றுகள் சிலங்கூரில் பதிவாகி உள்ளன என்று சுகாதார இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று மாலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம் 760 தொற்றாளர்களுடன் இரண்டாவது இடத்திலும், சரவாக் 640 பேருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
கடந்த வாரம் அரை மில்லியன் பதிவுகளை நாடு எட்டியது. அதாவது, இதுவரை 533,367 பேர் தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர்.
ஜோகூர், பினாங்கு, கிளந்தான், கெடா போன்ற மாநிலங்களும் முறையே 587, 420, 547, 542 பேர் தொற்று இலக்காகி இருக்கின்றனர்.
டாக்டர் நூர் ஹிஷாம் மேலும் கூறுகையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களுடன் இணைக்கப்பட்ட ஒரு டஜன் புதிய திரள்களை கண்டறியப்பட்டன. எதிர் வரும் நாட்களில் இது இன்னும் அதிகமாக வெளிவரக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
470 தொற்றுகள், சம்பந்தப்பட்ட ஏழு மாநிலங்களில் நோன்புப்பெருநாள் வழி வந்த திரள்கள் என்பது குறிப்பிட்டு அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நோன்புப் பெருநாளின் முதல் நாளில் முஸ்லிம்கள் தங்கள் உறவினர்களை சந்திப்பதை தடைசெய்து நாடு தழுவிய இயக்க கட்டுப்பாட்டு உத்தரவை பொது சுகாதார அதிகாரிகள் அமல்படுத்தினார்கள். இருப்பினும், இந்தத் திரள்கள் தோன்றி உள்ளன.
தேசிய பாதுகாப்பு கவுன்சில், ஈகைத் திருநாளுக்கு சமூக மற்றும் குடும்ப வருகைகளை தடைசெய்தது. கோவிட் -19 நோய்த் தொற்றுகளின் புதிய அலைகளைத் தடுக்க நாடு முழுவதும் மூன்றாவது இயக்கக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டது, இது நேற்றும் இன்றும் 7,000 பேரைத் தாண்டிச் சென்றுள்ளது.
ஹரி ராயா கிளஸ்டர்களின் தோற்றம், கோவிட் எதிர்ப்பு நிலையான இயக்க நடைமுறைகளை பலவீனமாக அமல்படுத்துவதாக பலமுறை குற்றம்சாட்டிய பொது உறுப்பினர்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை, இது நோன்புப் பெருநாளுக்கு சில நாட்களுக்கு முன்னர் மக்கள் மாநில எல்லைகளை கடப்பது எவ்வளவு எளிது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
சிலாங்கூர், பஹாங், பினாங்கு, சரவாக் ஆகிய மாநிலங்கள் தலா ஒரு நோன்புப் பெருநாள் திரளுக்கு ஆளாகி இருக்கின்றன. இந்த அனைத்து திரள்களும் மே 19 முதல் மே 25 வரை பதிவானவை.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
