செய்திகள் மலேசியா
கிளந்தானில் நிலநடுக்கம் ஏற்படவில்லை: வானிலை ஆய்வு துறை விளக்கம்
கோத்தபாரு:
கிளந்தான் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என மலேசிய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு முகமைகள் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் ஒரு இணையதளத்தில் நிலநடுக்கம் குறித்து செய்தி வெளியானதாக அத் துறையின் தலைமை இயக்குநர் பீலான் சைமன் கூறினார்.
கிளந்தான் மாநிலத்தில் உள்ள குவா மூசாங் பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வைரலானது.
"மலேசியாவில் எத்தகைய நிலநடுக்கமும் ஏற்படவில்லை. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் மே 26ஆம் தேதி இரவு 9.38 மணியளவில் ஒரு நிலநடுக்கம் உணரப்பட்டது.
"நிலநடுக்கம் அல்லது சுனாமி குறித்த சரியான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my தளத்தை அணுகலாம்," என்று அறிவுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 2:52 pm
ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
ஜொகூர் பிரச்சாரத்தில் மசீசவுக்கு எதிராக டத்தோஸ்ரீ அன்வர் கிண்டலான கருத்துக்களைத் தெரிவித்தார்
July 9, 2026, 11:01 pm
