
செய்திகள் மலேசியா
கிளந்தானில் நிலநடுக்கம் ஏற்படவில்லை: வானிலை ஆய்வு துறை விளக்கம்
கோத்தபாரு:
கிளந்தான் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என மலேசிய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு முகமைகள் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் ஒரு இணையதளத்தில் நிலநடுக்கம் குறித்து செய்தி வெளியானதாக அத் துறையின் தலைமை இயக்குநர் பீலான் சைமன் கூறினார்.
கிளந்தான் மாநிலத்தில் உள்ள குவா மூசாங் பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வைரலானது.
"மலேசியாவில் எத்தகைய நிலநடுக்கமும் ஏற்படவில்லை. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் மே 26ஆம் தேதி இரவு 9.38 மணியளவில் ஒரு நிலநடுக்கம் உணரப்பட்டது.
"நிலநடுக்கம் அல்லது சுனாமி குறித்த சரியான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my தளத்தை அணுகலாம்," என்று அறிவுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm
எஸ்டிஆர், ரஹ்மா உதவித் தொகை திட்டங்களை அரசாங்கம் தொடரும்: பிரதமர்
July 31, 2025, 1:23 pm
தேசிய தரவு ஆணையம் விரைவில் நிறுவப்படும்: பிரதமர்
July 31, 2025, 1:00 pm