செய்திகள் மலேசியா
நாட்டின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி மையம் திங்கள்கிழமை திறக்கப்படுகிறது
கோலாலம்பூர்:
நாட்டின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி மையம் திங்கள்கிழமை திறக்கப்படுகிறது.
மலேசிய அனைத்துலக வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் அமைந்துள்ள (Mitec) இந்த தடுப்பூசி மையத்தில் தினந்தோறும் 5 ஆயிரம் தனி நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்டமாக 2600 மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
51 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மையத்தில் தொடக்க நிலையில் 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் பின்னர் இந்த அன்றாட எண்ணிக்கை 8 ஆயிரம் தனி நபர்களாக அதிகரிக்கக்கூடும் என்றும் MITEC தற்காலிக தலைமைச் செயல் அதிகாரி மாலா துரைசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான வசதிகளும் இம்மையத்தில் உள்ளது என்றும் மருத்துவ மற்றும் நிகழ்ச்சி மேலாண்மை பணியாளர்கள் அனைத்தும் நல்லபடியாக நடைபெறுவதை உறுதி செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் மையத்துக்குள் வர ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே திறந்திருக்கும் என்றும் மாலா துரைசாமி மேலும் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன
April 10, 2026, 3:32 pm
பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு: 60 வயது முதியவர் உடல் கருகிய நிலையில் மீட்பு
April 10, 2026, 3:23 pm
பெலூரானில் 157 மாணவர்கள் தவிப்பு: வெயிலிலும் மழையிலும் கூடாரத்தின் கீழ் கல்வி பயிலும் அவலம்
April 10, 2026, 12:55 pm
