நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் புதிய உச்சம்: 24 மணி நேரத்தில் 8,290 கோவிட் - 19 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன

கோலாலம்பூர்:

கடந்த 24 மணி நேரத்தில் 8,290 கோவிட் - 19 தொற்றுகளுடன் மற்றொரு புதிய சாதனையை மலேசியா எட்டி இருக்கின்றது. இதுவரை இல்லாத உச்சபட்ச தொற்று எண்ணிக்கை இதுவாகும்.

வழமைபோல் இன்றும் சிலங்கூர் கொரோனா தொற்று எண்ணிக்கையில் முதல் இடத்தில உள்ளது. அந்த மாநிலத்தில் 2052 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன.

இரண்டாவது இடத்தில் கிளந்தான் 851 பேருடன் இருக்கின்றது.கூட்டரசுப் பிரதேசம் கோலாலும்பூர் 830 பேருடன்  மூன்றாவது இடத்திலும் உள்ளது.

ஜோகூர் 762, சரவாக் 698, கெடா 544, பினாங்கு 421, நெகிரி செம்பிலான் 520, சபா 308, திரெங்கானு 207, பஹாங் 254, மலாக்கா 380,  பேராக் 405, லாபுவான் 6, புத்ராஜெயா 44 தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர்.

இவ்வாறு இன்றைய நிலவரத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset