செய்திகள் மலேசியா
ஐந்து லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாடு திரும்பிவிட்டனர்: டத்தோஸ்ரீ எம்.சரவணன் தகவல்
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தேவை அதிகரித்து வருவதாக, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தேதியில் பல்வேறு துறைகளில் நிலவும் இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு, குறைந்தபட்சம் 5 லட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தற்போது தோட்டத்துறையில்தான் அதிகமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவைப்படுவதாக, செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில், நாட்டில் 17 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், பல்வேறு துறைகளில் வேலை செய்து வந்ததாக குறிப்பிட்ட டத்தோஸ்ரீ எம். சரவணன், அவர்களில் சுமார் ஐந்து லட்சம் பேர் தங்கள் தாய் நாடுகளுக்கு திரும்பிச் சென்றுவிட்டனர் என்றும், இதன் காரணமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 12 லட்சமாக குறைந்துவிட்டது என்றும் விளக்கமளித்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களை தருவிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பல்வேறு துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது நன்கு புலப்படுகிறது என்றார் டத்தோஸ்ரீ எம். சரவணன்.
தோட்டத்துறையில் அதிகமான தொழிலாளர்கள் தேவைப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், பல்வேறு துறைகளில் பணியாற்ற குறைந்தபட்சம் 5 லட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர், என்று மேலும் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன
April 10, 2026, 3:32 pm
பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு: 60 வயது முதியவர் உடல் கருகிய நிலையில் மீட்பு
April 10, 2026, 3:23 pm
பெலூரானில் 157 மாணவர்கள் தவிப்பு: வெயிலிலும் மழையிலும் கூடாரத்தின் கீழ் கல்வி பயிலும் அவலம்
April 10, 2026, 12:55 pm
