செய்திகள் மலேசியா
ஐந்து லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாடு திரும்பிவிட்டனர்: டத்தோஸ்ரீ எம்.சரவணன் தகவல்
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தேவை அதிகரித்து வருவதாக, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தேதியில் பல்வேறு துறைகளில் நிலவும் இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு, குறைந்தபட்சம் 5 லட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தற்போது தோட்டத்துறையில்தான் அதிகமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவைப்படுவதாக, செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில், நாட்டில் 17 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், பல்வேறு துறைகளில் வேலை செய்து வந்ததாக குறிப்பிட்ட டத்தோஸ்ரீ எம். சரவணன், அவர்களில் சுமார் ஐந்து லட்சம் பேர் தங்கள் தாய் நாடுகளுக்கு திரும்பிச் சென்றுவிட்டனர் என்றும், இதன் காரணமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 12 லட்சமாக குறைந்துவிட்டது என்றும் விளக்கமளித்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களை தருவிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பல்வேறு துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது நன்கு புலப்படுகிறது என்றார் டத்தோஸ்ரீ எம். சரவணன்.
தோட்டத்துறையில் அதிகமான தொழிலாளர்கள் தேவைப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், பல்வேறு துறைகளில் பணியாற்ற குறைந்தபட்சம் 5 லட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர், என்று மேலும் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
