
செய்திகள் மலேசியா
உரிய ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டவர்கள் ஊரடங்கின்போது கைது செய்யப்படுவர்: உள்துறை அமைச்சர் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
ஊரடங்கின்போது உரிய ஆவணங்கள் இன்றி மலேசியாவில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் கைது செய்யப்படுவர் என உள்துறை அமைச்சர் ஹம்சா ஜெய்னுதீன் தெரிவித்துள்ளார்.
இமிகிரேஷன் அதிகாரிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வர் என அவர் கூறினார்.
இமிகிரேஷன் துறையுடன், தேசிய பதிவுத்துறை, காவல்துறை ஆகியனவும் இந்த நடவடிக்கையில் பங்கெடுக்க உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஹம்சா ஜெய்னுதீன், கைது செய்யப்படுபவர்களை தடுத்து வைக்க சிறைத்துறை கூடுதல் தடுப்பு மையங்களை ஏற்பாடு செய்யும் என்றார்.
"கடந்த முறை சிறைகளில் போதுமான இடம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் இம்முறை உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஓராண்டாக பல்வேறு SOPக்கள், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகள் அமலில் உள்ளன. அதன் பிறகும் பிடிவாதமாக உள்ள வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்படுவார்கள்" என்று ஹம்சா சைனுதீன் தெரிவித்தார்.
முழு முடக்க நிலையின்போது தற்போது பணியில் உள்ள 37 ஆயிரம் பேருடன் மேலும் 18 ஆயிரம் பேர் இணைந்து, ஒட்டுமொத்தமாக 55 ஆயிரம் பேர் SOPக்கள் சரிவர பின்பற்றப்படுகின்றனவா எனக் கண்காணிப்பர் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது நாடு முழுவதும் 600 சாலைத்தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் ஹம்சா சைனுதீன், இந்த எண்ணிக்கை 800ஆக அதிகரிக்கப்படும் என்றார்.
மேலும், அரசு அமைச்சுகள், முகமைகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து சமூக மற்றும் பொருளாதார துறைகள் சார்ந்த SOPக்கள் முறையாக கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்பதைக் கண்டறிய திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm