
செய்திகள் மலேசியா
மே 27, மே 28: LRT, MRT ரயில்களில் பயணம் செய்தவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது
கோலாலம்பூர்:
கடந்த வியாழன் (மே 27), வெள்ளி (மே 28) ஆகிய இரு தினங்களிலும் எல்.ஆர்.டி. மற்றும் எம்.ஆர்.டி. ரயில்களில் அதிக கூட்டம் இருக்கும் காலை வேளையில் பயணம் செய்த அனைவரும் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளுமாறு Prasarana அறிவுறுத்தி உள்ளது.
அவ்விரு ரயில் சேவைகளைப் பயன்படுத்திய இருவர் தங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தாமாக முன்வந்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட அந்த இரு பயணிகளும் மே 27, 28 தேதிகளில் தாங்கள் எல்.ஆர்.டி, எம்.ஆர்.டி. ரயில்களில் பயணம் மேற்கொண்ட பிறகு தங்களுக்கு கொவிட் 19 கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
இருவரில் ஒருவரான கிளாடியா Claudia கடந்த 21ஆம் தேதிதான் முதல் தவணையாக ஃபைசர் தடுப்பூசியை போட்டுக் கொண்டதாகவும் தொற்று ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியையும் தாம் உணரவில்லை என்றும் கூறியுள்ளார்.
மற்றொரு பயணியான Nurul Aishyah தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் 27ஆம் தேதியன்று எல்.ஆர்.டி. ரயிலில் தாமன் மெலாத்தியில் இருந்து கே.எல்.சி.சி. வரை பயணம் செய்ததாகவும், தன்னைப் போலவே பயணம் மேற்கொண்ட சக பயணிகள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மே 27ஆம் தேதி காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் இவர் ரயில் பயணம் மேற்கொண்டதாக Prasarana தெரிவித்துள்ளது. அதேபோல் மே 28ஆம் தேதி காலை 7.30 முதல் 8.30 மணிக்குள் Claudia ரயிலில் பயணம் செய்ததாகவும் Prasarana மேலும் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm