
செய்திகள் மலேசியா
மலேசியர்கள் தடுப்பூசியைத் தேர்வு செய்ய அனுமதி இல்லை: முடிவை மாற்றிக்கொண்டது அரசாங்கம்
புத்ராஜெயா:
மலேசியர்கள் தங்களுக்கான கொரோனா தடுப்பூசியைத் தேர்வு செய்யலாம் என்று வெளியிட்ட அறிவிப்பை அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இவ்வாறு தேர்வு செய்ய வழங்கப்படும் அனுமதியானது தடுப்பூசி நடவடிக்கைகளில் தாமதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் அனைத்து மலேசியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது. தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி போடும் திட்டத்தை அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகிறது.
இந் நிலையில் மலேசியர்கள் தங்களுக்கு விருப்பமான தடுப்பூசியைத் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
பல்வேறு கொரோனா தடுப்பூசிகள் சந்தைக்கு வந்திருப்பதால் மக்கள் தங்களுக்குத் திருப்தியும் அதிக நம்பிக்கையும் அளிக்கக்கூடிய தடுப்பூசிகளைத் தேர்வு செய்வது அவர்களுக்கு மனநிறைவைத் தரும் என்பதால் அரசு இப்படியொரு வாய்ப்பை வழங்குவதாக கருதப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
இந் நிலையில் முந்தைய அறிவிப்பை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.
தடுப்பூசியைத் தேர்வு செய்ய அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படும் என அரசாங்கம் கருதுவதாக அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் தடுப்பூசி திட்டத்தின்கீழ் அதிகமானோருக்கு தடுப்பூசி போடுவதில்தான் அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். தடுப்பூசி போடும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டால்தான் அது தொடர்பாக அரசு வகுத்துள்ள இலக்கை அடையமுடியும் என்றும் அவர் கோடி காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm